Showing posts with label Ankalamman. Show all posts
Showing posts with label Ankalamman. Show all posts

Saturday, May 7, 2011

Godess Angalaamma Prefered Cloths Woven by Sourashtra people

சௌராஷ்டிரர்கள் நெய்த ஆடைகளை உடுத்த சமர்பிக்கும்படி அருள்வாக்கு  கூறிய அங்காளம்மன் கோவில்
.


நாமக்கல் மாவட்டம், கொல்லி மலை அடிவாரத்தில் உள்ள பழையபாளையம் என்ற ஊரில் ஏரியின் எதிரில் இருக்கும் அங்காளம்மன் கோவில் அம்மன் தான்; சௌராஷ்டிரர்களை சேலை சமர்பிக்கும்படி அருள் வாக்கு கூறிய அன்னை. அன்னையின் அருள் வாக்கினை படமாக கோவிலின் உள் சித்தரித்து வைத்துள்ளனர். கிழிந்த ஆடையுடன் உள்ள அன்னை சௌரஷ்டிரர்களிடம் சேலை கேட்டு அருள் வாக்கு கூறிய செய்தி அவ்வோவியத்தில் உள்ளது. மேலும் இந்த அங்காள அன்னைக்கு உலக்கை சத்தம் ஆகாது என்பதால் ஊருக்கு வெளியே கோவில் கொண்டுள்ளாள். கோவிலின் அருகில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவிற்கு எந்த வீடும் இல்லை. வீடு, காடு இருந்தால் தானே நெல் குத்தும் உலக்கை சத்தம் கேட்பதிற்கு. !!

கோவில் பூசாரி சௌராஷ்டிரர்களை தேடி அணுகி அருள் வாக்கை கூறினார்.  அன்றிலிருந்து சௌராஷ்டிரர்களில், சேலம் நாமக்கல் வட்டாரத்தில் உள்ளவர்கள், அருள் வாக்கை கேட்ட சில கோத்திரத்தார் மட்டும் இக் கோவிலில் தங்களின் பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்துகின்றனர். அம்மனுக்கு அடிக்கடி தங்களால் இயன்றபோதெல்லாம் சேலை சமர்பிக்கின்றனர்.
எப்பொழுதில் இருந்து இந்த ஆடை சமர்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது என்று சரியாக தெரியவில்லை.  நினைவு தெரிந்த நாளில் இருந்து இதனை செய்து வருகிறோம் என்கின்றனர் சமர்பிக்கும் சௌராஷ்டிரர்கள்.  சுற்று வட்டாரத்தில் இருக்கும் முஸ்லிம்களும் இக்கோவிலுக்கு வந்து பலி பூசையிட்டு வணக்கிச் செல்வதை பார்க்க முடிகிறது. 

அங்காளம்மன் தியானம் :


எகவக்த்ராம் த்ரிநேத்ராம் ச ஜடாமகுட மண்டிதாம் !

ஜ்வாலகேசாம் கரலாஞ்ச தக்ஷிணே நகர குண்டலாம் !!

வாமகர்ணே பத்ர பூஷாம் சர்வாபாரண பூஷிதாம் !

பாச சூல கபாலோக்ர டங்க ஹேதி விராஜிதாம் !!

பிதாம்பாரதராம் வ்ருஷ்டாம் கங்காள பரமேஸ்வரீம் !

வந்தே சதுர்புஜமுக்ராம் குங்குமாபாம் சுபாப்ரதாம் !!



அங்காளம்மன் காயத்ரி :

ஓம் காம் கங்காள்யை ச வித்மஹே ஜ்வாலா கேஸாய ச தீமஹீ !

தன்னோ தாத்ரீ ப்ரசோதயாத் !!