Roots of Sourashtra
Giving details about Sourashtra language and people of Tamil nadu, India. Sourashtra community of Tamil Nadu, migrated from Saurashtra region at least 1000 years before.
Friday, February 6, 2026
சிந்து சமவெளி "கூடை முறுக்கு"
Friday, November 28, 2025
மைசூர் அரசவையும் சேலம் நெசவாளிகளும்
சேலம் சௌராஷ்ட்ர வின்கார் நெசவாளிகள் மைசூர் அரசர், அதிகார குடும்பங்களுக்கு நெய்து கொடுத்த ஆடை இந்த பாணியில் உடுத்தி கொள்வர். கீழே உள்ள மைசூர் அரண்மனை ஓவியம் இதனை உறுதி படுத்துகிறது.
Sunday, October 12, 2025
Sunday, March 10, 2024
சௌராஷ்டிரத்தில் மக்கள் குழுக்களை அடையாளம் காணும் முறை
சௌராஷ்டிரத்தில் மக்கள் குழுக்களை அடையாளம் காணும் இந்திய முறை
சௌரஷ்டிர மாநிலம் பல்வேறு சமஸ்தானங்களாக பிரித்து ஆளப்பட்ட சூழ்நிலையில், சமஸ்தான மக்களுக்கு இடையே தனது குடியுரிமை எந்த சமஸ்தானத்தை சேர்ந்தது என்று ஒருவருக்கொருவர் அறிந்து கொள்ள சமஸ்தான பெயர், புழங்கும் மொழி, ஆடை உடுத்துதலில் சிறிய மாற்றத்துடன் ஒரே மாதிரியான உடுப்பு உடல் ஆகியவை பங்கு வகித்தன. சமஸ்தான எண்ணிக்கை கூடினால் இவ்வடையாளங்கள் கூடும். !குறைந்தால் அடையாளங்கள் குறையும்.!!
சௌராஷ்ட்ரா சமஸ்தானங்களை பொறுத்த வரை, சாதியை விட, நான்கு வர்ணங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெற்று இருந்தன.
சாதி அமைப்புக்கு பழக்கப்பட்ட இந்தியர்கள், அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள்
பல்வேறு அடையாளங்கள் அல்லது "குறிப்பான்கள்" மூலம் தாங்களும் மற்றவர்களும் அடையாளப்படுத்தி வேறுபடுத்தி காண்பித்துக் கொள்கின்றனர்.
இன எல்லைகளுக்கான சொல். ஆயினும்கூட, அடையாளத்தின் உண்மையான மொழி
"சாதி அமைப்பு" பற்றிய எளிமையான அல்லது மறுபரிசீலனை செய்யும் கருத்துக்களை விமர்சிக்கும் ஒரு கோணத்தில் நாம் இருக்கிறோம் .
சமூக உலகின் ஒரு சிக்கலான தன்மையை வெளிப்படுத்துகிறது, இது எந்த எளிய விஷயத்திற்கும் அப்பாற்பட்டது
"அமைப்பு" என்ற கருத்து. ஊடாடும் அல்லது சமூக மொழியியல் அணுகுமுறைகள் திறக்கப்பட்டுள்ளன
இந்திய சமூகத்தில் புதிய கண்ணோட்டங்களை உருவாக்கி, "சாதி அமைப்பு" என்ற கருத்தைத் தள்ளியது
சமூகத்தை கட்டமைக்கும் பல மாதிரிகளில் ஒன்று மற்றும் ஒரு குறிப்பு
பொதுவான பயன்பாட்டில் உள்ள அடையாள மொழிகள் முக்கிய பங்காற்றுகின்றன .
மற்ற சமூக-மொழி வல்லுனர்கள், இத்தகைய வேரூன்றிய பல உட்குறிப்புகளை புறக்கணிக்க முனைகின்றனர்
சௌராஷ்டிராவில் நடைமுறையில் உள்ள அடையாள மொழியைப் புரிந்துகொள்வது அவசியம்.
சௌராஷ்டிரா புவியியல் ரீதியாகவும் இந்திய உலகின் சுற்றளவில் உள்ளது
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக. காலனித்துவ காலத்தில், இன்னும் அதிகமாக இருந்தன
தீபகற்பத்தில் 200க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள். பெரியவை, போன்றவை
ஜூனாகத், ஜாம்நகர் அல்லது பாவ்நகர், சரியான மற்றும் சில சமயங்களில் கிட்டத்தட்ட பழங்குடியினரின் தன்மையைக் கொண்டிருந்தது. சாதிய படிநிலை என்ற கருத்து தற்போது உள்ளது
சௌராஷ்டிராவில் எல்லா இடங்களிலும், ஆனால் பாரம்பரிய அரசியலின் சிக்கல்கள் விட்டுவிட்டன
ஒன்றிலிருந்து உண்மையான தரவரிசை மற்றும் அமைப்பில் கணிசமான மாறுபாடு
ஒருவருக்கு புதிய சமஸ்தான குடியுரிமை பழைய சமஸ்தானம் இன்னொருவருக்கு.
பெரும்பாலான மாநிலங்களை ஆண்ட ராஜபுத்திரர்களுக்கு, ராஜஸ்தான் மைய புள்ளி
குறிப்பு; ஜெய்ப்பூர், ஜோத்பூர் அல்லது உதய்பூர் போன்ற ராஜ்யங்கள் முன்மாதிரியாக செயல்பட்டன
மாநிலம் மற்றும் சமூகம். சமஸ்தானத்திற்கு வெளியே உள்ள சிறு சிறு அலகுகளை சேர்ந்த கிராமவாசிகள்
அதிகாரம் தங்கள் "சுதந்திரம்" பற்றி பெருமிதம் கொண்டது, அதே நேரத்தில் இல்லாததற்கு வருந்தியது
ஒரு மதிப்புமிக்க நீதிமன்றம். இந்த முரண்பாடு ராஜபுத்திர தற்காப்பு சித்தாந்தம் மற்றும்
சௌராஷ்டிர சமூகத்தின் பெரும்பகுதி. சுதந்திரத்தின் மீதான அன்பு மரியாதையுடன் கலந்தது
ஆட்சியாளர்கள் மற்றும் பிரபுத்துவம். சுதந்திரத்திற்கான வேட்கை குறிப்பாக வலுவாக இருந்தது
மற்ற சாதிகளைச் சேர்ந்த தலைவர்களைப் போலவே ராஜபுத்திர சக்தி இல்லாத இடத்தில் இருந்தது
கதி, அஹிர் அல்லது கோலி என, அவர்கள் தங்கள் களங்களை மிகவும் ஏழ்மையிலும், மிகவும் ஏழ்மையிலும் வைத்திருந்தனர்
சௌராஷ்டிராவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்.
உள்ளூர் மொழியில், கிராமங்கள் 'பெரிய' அல்லது 'சிறிய' எனத் தகுதி பெற்றுள்ளன -
இந்த வேறுபாடு கிராமத்தின் அளவு மற்றும் அதன் கௌரவம் ஆகியவற்றைக் குறிக்கவில்லை.
சிறிய கிராமங்களில் சில கைவினைஞர்கள் அல்லது பிற நிபுணர்கள் இருந்தனர்
அவை எல்லாவற்றிற்கும் மேலாக அடுக்குப்படுத்தல் மற்றும் உழைப்புப் பிரிவின் ஒப்பீட்டு குறைபாடு ஆகும்.
பெரிய கிராமங்களில் ஒரு முறையான தலைவர், பிராமண பூசாரிகள் மற்றும் பல வகையான கைவினைஞர்கள் இருந்தனர்
உடனிருந்தனர். ஒருவரிடமிருந்து வந்ததன் மூலம் தனிநபரின் கௌரவம் மேம்படுத்தப்பட்டது
முக்கியமான கிராமம், ஒரு தலைவரை நம்பியிருந்தாலும், அது விவசாயி
ஒரு சிறிய கிராமத்திலிருந்து தவிர்க்கப்பட்டது.
பழைய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் பல சாதிகளும் சாதிக் குழுக்களும் அந்தஸ்துக்காக போட்டியிட்டன
அந்தஸ்துக்காக. ராஜபுத்திரன் உறவில் எப்போதும் ஒரு தெளிவின்மை இருந்தது
மற்றும் பிராமணர். பிந்தையவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் கண்டாலும், எதைக் குறிப்பிடுகிறார்கள்
நாம் இப்போது பான்-இந்திய தரநிலை என்று அழைப்போம், ராஜபுத்திரர்கள் அவர்களைப் பார்த்து பொறாமை கொண்டனர்
அவர்களின் சொந்த களங்களில் முதன்மையானது. பொதுவாக, மிகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளர்கள், நிச்சயமாக
அவர்களின் சொந்த கௌரவம், பிராமணர்களை விட அதிகமாக அங்கீகரிக்கத் தயாராக இருந்தது
அவர்களின் குறிப்பாக மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள். நாகர் பிராமணர்கள், மிகவும் மதிப்புமிக்கவர்கள்
சௌராஷ்டிராவில் எல்லா இடங்களிலும் பழைய நிலப்பிரபுக்கள், முஸ்லீம், ராஜ்புத் அல்லது மற்றவை, அந்தஸ்த்துக்களுடன் உள்ளன வாணியர்கள் அல்லது பனியாக்கள் போன்ற வணிக சாதிகளை அந்தஸ்துக்காக எதிர்க்கின்றன
சைவம் மற்றும் அகிம்சையின் மதிப்புகளில் அடிப்படையில் வேறுபடுகின்றன.
வணிகர்கள் தங்களை இளவரசர்களுடன் அடையாளப்படுத்தியதாகத் தெரியவில்லை
மாநிலங்கள் அல்லது அவற்றின் அரசியல் ஒழுங்கு, இது சம்பந்தமாக அவர்கள் பெரும்பாலானவர்களிடமிருந்து தனித்து நின்றார்கள்
மக்கள் தொகையில். வனியாக்களைப் பொறுத்தவரை, சிவில் என்பது குறிப்புப் புள்ளியாக இருந்தது
குஜராத்தின் வணிக நகரங்களின் சமூகம் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த நகரங்கள்
சக்தி வாய்ந்த வணிகர் சங்கங்களைக் கொண்டிருந்தது, ஒரு "நாகர்ஷேத்தின்" பின்னால் ஒன்றுபட்டது
பல மேற்கத்திய நகரங்களின் மேயருடன் ஒப்பிடும்போது. அத்தகைய அமைப்பு இருந்தது
சௌராஷ்டிராவும், ஆனால் பாவ்நகரைத் தவிர, வணிகர்களின் அதிகாரம் ஆட்சியாளரின் இருப்பால் தடைபட்டது. என்ற அடையாளம்
நிலப்பரப்பைக் கொண்ட வணிகர்கள் அவர்கள் பயன்படுத்துவதற்காக அவர்களின் மொழியில் வெளிப்படுத்தப்படுகிறார்கள்
நிலையான குஜராத்தி, மாறாக விவசாயிகளின் கதியவாடி பேச்சுவழக்கு மற்றும் அவர்களின் எஜமானர்கள்.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், தமிழ் சமூகத்தில் அய்யங்கார் மக்கள் குழு, பேசும் மொழி மற்ற மக்கள் குழுவிடம் இருந்து வேறுபட்டு, தனக்கே உரித்தான, ஆத்துக்கு வாங்க, அம்பி, அவா வந்தாளா ? என்ற வகையில் வேறுபடுத்தி தங்கள் அடையாளத்தை நிலை நிறுத்துவது போன்று.
Friday, July 28, 2023
தேங்காய் இலவசம்
தேங்காய் இலவசம்
தமிழாக்கம் : தெஸ்வான் பாஸ்கர் சேலம்.
(சௌராஷ்டிர கிராமிய கதைகள்)
பீதான் பாவிற்கு (बीदान् बा ) ஒரு நாள் தேங்காய் துருவல் பகிரி / भगिरि சாப்பிடணும்னு ஆசை வந்துட்டது. துருவின தேங்காயோட கொஞ்சம் சர்க்கரையும் சேர்ந்து பகிரி சுட்டு சாப்பிட்டா எத்தனை நல்லா இருக்கும்!”னு பீதான் பா சப்புக்கொட்டினார்.
அவரின் குடும்பப்பெயரான பீதான் என்பதுடன் பா என்ற (ஐயா) சொல்லையும் சேர்த்து மக்கள் அவரை அழைத்தனர்.
ஆனா ஒரு சின்ன பிரச்சனை. வீட்டுல ஒரு தேங்கா கூட இல்லை "கடைக்குப் போகணுமே” ன்னு தன்னுடைய மனைவி லெட்சும்-பை கிட்ட சொன்னார்.
"உங்களுக்குச் சாப்பிடணும்னா போகத்தான் வேணும்"னு அவ சொன்னாள். இன்னொரு பிரச்சனையும் இருந்தது. காசு செலவழிச்சாகணும். !
பீதான்-பா சரியான கஞ்சன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும் வெளியில் வயக்காட்டுப் பக்கம் போய் ஒரு பெரிய ஆலமரத்துக்கு அடியில உக்கார்ந்து யோசிச்சார். "என்ன செய்யலாம். என்ன செய்யலாம்."தேங்காய்த் துருவலப் பத்தி நினைக்க நினைக்க வாயில தண்ணி ஊற ஊற பீதான் பாவுக்குத் தாங்க முடியல. வீட்டுக்கு வந்து லெட்சும்-பை கிட்ட சொன்னார்...
"கடைக்குப் போயி தேங்கா என்ன வெல விக்கறதுன்னு பாத்திட்டு வரேன்." செருப்பை மாட்டிக்கிட்டு கைத்தடியையும் தூக்கிக்கிட்டு பீதான் பா கிளம்பினார்.
சுறுசுறுப்பா இருந்த கடைத்தெருவிலே பீதான் பா மேலும் கீழுமா நடந்தார். இது என்ன வெல, அது என்ன வெலன்னு கேட்டபடி கடைசியில் ஒரு தேங்காய் வியாபாரிகிட்ட வந்தார்.
"ஏம்பா, இது என்ன வெல?"ன்னார் பீதான் பா "ரெண்டு ரூபாய்தான் ஐயா"ன்னார் தேங்காய் வியாபாரி. ரெண்டு ரூபாயா? பீதான்-பாவுடைய கண் அதிர்ச்சியிலே பெரிசாப் போச்சு.
"அது ரொம்ப ஜாஸ்தி, ஒரு ரூபாய்க்குக் கொடு."
"முடியாதய்யா ஒரு தேங்காய் ரெண்டு ரூபாய்தான் வேணும்னா எடுத்துக்குங்க. வேண்டாம்னா வெச்சுடுங்க"ன்னார் தேங்காய் வியாபாரி. "சரி சரி"ன்னார் பீதான் பா. "ஒரு ரூபாய்க்கு எங்க கிடைக்கும்னு உனக்குத் தெரியுமா?"
"கொஞ்ச தூரம் போனீங்கன்னா ஒரு பெரிய கடைத்தெரு வரும். அங்க ஒரு வேளை கிடைக்கலாம்."
பீதான் பா கிளம்பினார் அங்கே போனாப் போச்சுன்னு தனக்குள்ள சொல்லிக்கிட்டார். "கொஞ்சம் நடந்த மாதிரியும் இருக்கும். ஒரு ரூபாயும் மிச்சம்." கைத்தடிச்சத்தம் போட்டபடி நடந்தார்.
பெரிய கடைத்தெரு ஒரே சந்தடியாய் இருந்தது. "படாட்டா உருளை! படாட்டா உருளை! காந்தா வெங்காயம்! காந்தா வெங்காயம்! காஜர் கேரட்! காஜர் கேரட்! கோபி-கோஸ்! கோபி-கோஸ்!'
பீதான் பாவுக்கு வியர்த்துப் போச்சு. "ஏ தேங்காக்காரரே, தேங்கா என்ன வெல"ன்னார். "ஒரு ரூபாய்தான் ஐயா எடுங்க சீக்கிரம்”ன்னு தேங்காய் வியாபாரி அவசரப்படுத்தினார்.
"அச்சீன் பா, என்னப்பா இது!" அப்படின்னார் பீதான் பா. "நா இவ்வளவு தூரம் வந்திருக்கேன் நீ ஒரு ரூபாய் சொல்றியே இதுக்கு அம்பது காசுதான் கொடுக்கலாம். இந்தா அம்பது காசு இந்தத் தேங்காயை எடுத்துக்கறேன்.''
தேங்காய் வியாபாரியான அச்சீன் பா, அவர் கையிலிருந்த தேங்காயைப் பிடுங்கிக்கிட்டார். "மன்னிச்சுக்குங்க. ஒரு ரூபான்னா ஒரு ரூபாதான்" பீதான் பாவுடைய முகம் போன போக்கைப் பார்த்து "துறைமுகத்துக்குப் போங்க அங்க ஒருவேளை அம்பது காசுக்குக் கிடைக்கலாம்"ன்னு சொன்னார்.
"அம்பது காசுன்னா அம்பது காசு" ன்னு பீதான் பா தனக்குள்ள சொல்லிக்கிட்டார். "துறைமுகத்துக்கு நடந்தா போச்சு கால் ஒண்ணும் வலிக்கல்லே." பீதான் பா நடக்க ஆரம்பித்தார் நடுநடுவில் நின்னு நின்னு நடந்தார். ஒரு பெரிய வெள்ளை கைக்குட்டையை பாக்கெட்டிலிருந்து எடுத்து நெத்தியைத் துடைச்சுக்கிட்டார். துறைமுகத்திலே ஒரு படகோட்டி உட்கார்ந்திருந்தான். அவன்கிட்ட சில தேங்காய்கள் இருந்தது. "தேங்காய் எப்படிப்பா?” ன்னு கேட்டார் பீதான் பா "பார்த்தா நல்லா இருக்கு."
"பேஷான தேங்கா"ன்னான் படகோட்டி. "அம்பது காசுதான் ஐயா"
"அம்பது காசா?”ன்னார் பீதான் பா அதிர்ச்சி அடைஞ்சவர் போல. "இவ்வளவு தூரம் நடந்திருக்கேன். களச்சிப் போயிட்டேன். நீ அம்பது பைசாங்கிறே. நா நடந்தே இருக்கமாட்டேன். இருபத்தஞ்சு காசு தாரேன். எடுத்துக்கோ"தேங்காயை எடுக்க பீதான் பா குனிஞ்சார்.
"ஏ கிழவா போடு கீழ" அப்படீன்னான் படகோட்டி. "பேரம் பண்றதெல்லாம் என்கிட்ட வச்சுக்காதே மலிவா வேணும்னா தென்னந்தோப்புக்குப் போ. அங்க உனக்கு வேணுங்கற தேங்காய் கிடைக்கும். நீ கேக்கற வெலைக்கு.''
பீதான் பாவுக்கு களைப்பாய் இருந்தது காலிலே செம வலி இருந்தும் இருபத்தைந்து பைசா லாபம்னா அதை விட மனசில்லை “இத்தனை தூரம் நடந்தாச்சு தென்னந்தோப்பு வரை நடந்தா அது ஒண்ணும் தப்பு இல்லை"ன்னு தனக்குள்ள சொல்லிக்கிட்டார். "வாழ்க்கையிலே எதுவும் இலவசமாய்க் கிடைக்காது."
பீதான் பா தென்னந்தோப்புக்கு வந்து சேர்ந்தார் அங்கிருந்த தோட்டக்காரனைப் பார்த்து "இந்தாப்பா இந்த தேங்காயெல்லாம் என்ன விலை?”ன்னு கேட்டார்
''உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்குங்க"ன்னான் தோட்டக்காரன் "எத்தனை பெரிசு பாருங்க இருபத்தஞ்சு காசுதான்'
"கடவுளே! இருபத்தஞ்சு காசா? இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கேன் கால் வலிக்குது. இதப் பாரு. எனக்கு ஒண்ணு சும்மா கொடேன் நா ரொம்ப நல்லவன்"ன்னு பீதான் பா கெஞ்சினார்.
"அட பிச்சை கேக்காதீங்க உங்களுக்கு சும்மா வேணும்னா நீங்களே எடுத்துக்குங்க மரம் இருக்கு தேங்காய் இருக்கு நீங்களே ஏறிக்குங்க எத்தனை வேணுமானாலும் பறிச்சுக்குங்க நா பணம் கேட்டது பறிச்சுக் கீழே கொண்டு வந்ததுக்காக நீங்களே பறிச்சீங்கன்னா காசு கிடையாது"
"நிஜமாவா? பீதான் பாவுக்கு ஒரே சந்தோஷம் மரம் ஏறினா எத்தனை வேணுமானாலும் பறிச்சுக்கலாமா?"
தன்னுடைய பைஜாமாவை மேலே சுருட்டி ஜிப்பா கைகளை மடிச்சு விட்டுக்கிட்டு தென்னைமரத்திலே ஏற ஆரம்பிச்சார்.
மரம் நல்ல உயரம் ஏறும்போது தன்னுடைய அதிர்ஷ்டத்தை நினைச்சு பீதான் பா சந்தோஷப்பட்டார். எத்தனை வேணும்னாலும் எடுத்துக்கலாம். காசு கிடையாதுன்னு சொல்லிக்கிட்டார்.
பீதான் பா உச்சாணிக்குப் போயிட்டார். எல்லாத்தையும் விட பெரிசா இருந்த ஒரு தேங்காயைப் பறிக்க கையை நீட்டினார். சரேல்ன்னு அவருடைய கால் வழுக்கிட்டது. பீதான் பா தேங்காயைப் பிடிச்சபடி அந்தரத்திலே தொங்கினார்.
"அய்யய்யோ. இப்ப என்ன செய்யறது”ன்னு பீதான் பா காத்துலே ஆடியபடி அலறினார் கீழே இருந்த தோட்டக்காரனைப் பார்த்து, "தம்பி தம்பி, கொஞ்சம் உதவி செய்யேன்"ன்னார்.
"நல்லாயிருக்கே”ன்னு சொன்னான் தோட்டக்காரன் “நீ காசு கொடுக்கமாட்டே என் உதவி மட்டும் வேணுமா? எதுவும் சும்மா கிடைக்காது சாமி!” தோட்டக்காரன் மறைந்து போய்ட்டான் !
கொஞ்ச நேரம் கழித்து அந்த சமயம் ஒரு ஒட்டகத்து மேல உட்கார்ந்தபடி ஒரு ஆள் போனாள். “ஏய் ஏய், ஒட்டகக்காரா, காப்பாத்து!”ன்னு கத்தினார் பீக்கூபாய். “தொங்குற என்னுடைய காலை மறுபடியும் மரத்தில உக்காத்தி வச்சுடு. உனக்குப் புண்ணியமாப் போகட்டும்"ன்னார்.
ஓட்டகக்காரன் அய்யோ பாவம்னு நினைச்சான். “இந்தக் கிழவனுக்கு உதவறதினால் எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லே.” ஒட்டகத்து மேல நின்னுக்கிட்டு கிழவருடைய கால்களைப் பிடிச்சு மரத்திலே வைக்கப் பார்க்கும்போது ஒட்டகம் என்ன செஞ்சது தெரியுமோ? மரத்திலிருந்த பச்சை இலைகளைப் பார்த்ததும் கழுத்தை நீட்டித் தின்ன ஆசைப்பட்டு லேசா நகர்ந்தது.
ஒட்டகத்து மேலிருந்த ஆளுக்கு சறுக்கிட்டது. அவன்தான் "பீதான் பாவுடைய" கால்களை பிடிச்சுக்கிட்டிருந்தானே! இப்போ பீதான் பாவும் அவனும் சேர்ந்து அந்தரத்திலே தொங்கினாங்க.
அந்த வழியா ஒரு ஆள் குதிரை மேல் வந்தான்
“ஏய் ஏய். குதிரைக்காரா, தயவு செய்து உதவி பண்ணு"ன்னு இரண்டு பேரும் சேர்ந்துக் கத்தினாங்க
"என்னுடைய காலை மறுபடி மரத்தில் வச்சுடப்பா உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன்"னு பீதான் பா கதறினார்.
"இலங்களுக்கு உதவறதுக்கு ஒரு நிமிஷம்தான் ஆகும்"னு குதிரைக்காரன் நினைச்சான் “என்னுடைய குதிரைமேல் நின்னு தாவினாப் போச்சு"ன்னு அவள் குதிரை மேல நின்னான்
ஒட்டகங்களை விட குதிரைகள் தேவலைன்னு யார் சொன்னது? அதுவும் பசேல்னு புல்லைப் பார்த்தா குதிரை சும்மா விடுமா? குதிரைக் குனிஞ்சு வாய் நிறைய புல்லை எடுக்கப் பார்த்தபோது குதிரைக்காரன் ஒட்டகக்காரனுடைய காலைப் பிடிச்சபடி அந்தரத்திலே தொங்கினான் ஆக, அந்தரத்திலே தேங்காயைப் பிடிச்சபடி பீதான் பா. அவர் காலைப் பிடிச்சபடி ஒட்டகக்காரன் அவங்களோட மூணாவதாய் குதிரைக்காரன் எல்லாரும் தென்னைமரத்திலேந்து தொங்குறாங்க!
குதிரைக்காரன கத்தினான். "ஐயா ஐயா அந்தத் தேங்காயை கெட்டியாப் பிடிச்சுக்குங்க, யாராவது வந்து நமக்கு உதவற வரைக்கும் அத விட்டுப்புடாதீங்க உங்களுக்கு நா நூறு ரூபா தாறேன்."
ஒட்டகக்காரன் கத்தினான். “ஐயா ஐயா நான் உங்களுக்கு இருநூறு ரூபா தாறேன் அந்த தேங்காயை விட்டுப்புடாதீங்க"
"ஒரு நூறு அதோட இருநூறா? ஆத்தாடி முன்னூறு ரூபாயா?"ன்னு வாயைப் பிளந்தார் பீதான் பா “அவ்வளவா ?!அவ்வளவா?!!” பீதான் பாவுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திலேயும் ஆச்சரியத்திலேயும் என்ன செய்றோம்னு தெரியாம " இவ்ளோ ரூபாயா !" என்று சொல்லி கைகளை அகல விரிச்சார் தேங்காயிலிருந்த பிடி விலகிட்டது.
டமால் மூணுபேரும் - குதிரைக்காரன், ஒட்டகக்காரன், பீதான் பா மூணுபேரும் கீழே விழுந்தாங்க ! பீதான் பா கீழே விழுந்த அதிர்ச்சியிலிருந்து சமாளிச்சுக்கறதுக்குள்ள பொத்துனு ஒரு தேங்காய் அவர் தலையில் விழுந்தது.
இலவசமா !!
























