Thursday, July 27, 2023

உயிருடன் சிங்கம் பரிசாக வேண்டும் அரசே

உயிருடன் சிங்கம் பரிசாக வேண்டும் அரசே

(சௌராஷ்ட்ரா கிராமிய கதைகள் )

தமிழாக்கம் தெஸ்வான் பாஸ்கர், சேலம் 



ஏழாவது தலைமுறையாக சௌராஷ்ட்ரா சமஸ்தானமான "முலி"யின் சிம்மாசனத்தில் சாச்சோஜி அமர்ந்து இருந்தார். 


ஒருமுறை ஹலவாட் சமஸ்தானம் கேசர்ஜி மன்னரும், த்ரோல் சமஸ்தான ராஜாவும், முலி சமஸ்தான சாஞ்சோஜியும் கோமதி நதிக்கு புனித நீராட யாத்திரை சென்றனர்.  துரோல் சமஸ்தானம்  மற்றும் தாரங்கதாராவின் ஆட்சியாளர்கள் இப்படி புனித நீராடும் யாத்திரையில்  பல சபதங்களைக் கடைப்பிடித்தனர் என்று புகழ் பரவி இருந்தது.  அதனால்,  சாஞ்சோஜி அந்த மாதிரியான சபதத்தை எடுத்தார், 'என்னிடம் என்ன சொத்து இருந்தாலும், என்னை போட்டியில் தோற்கடித்து பழிவாங்குபவருக்கு நான் கொடுப்பேன்.


மூன்று யாத்ரீகர்களும் வீட்டிற்கு வந்தனர். படிப்படியாக இரண்டு பெரிய ஆட்சியாளர்கள் தங்கள் சபதங்களை நிறைவேற்றினர்.   ஆனால் சாஞ்சோஜியின் தீர்மானம் மிகவும் ஆபத்தானது. அந்த சபதம்,  அவரின்  உயிரைக் கூட  தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளும்  ! 


ஹல்வாட் சமஸ்தான மன்னர் தன் ஆஸ்தான துதிபாடும் சரண் சமூக பாடகரை தூண்டிவிட முடிவு செய்தார்.  

சரண் என்ற பாடகர்கள் சமூகத்தினர் அரசவையில் பாடுவது வழக்கம்.  ஹல்வாட் ஆட்சியாளர் தனது தசோதி சரனைத் தூண்டிவிட்டார். ஆட்சியாளர் கூறினார், ஏய் சரண், நீ முலி சமஸ்தான மன்னர் அரசவையில் போய் பாடு.  அவர் கோமதி நதிக்கரையில் ஒரு சபதம் போட்டு இருக்கிறார்.  தன்னை பழிவாங்குபவருக்கு தன் ராஜ்ஜியம் என்று. !  நீ அவரது மத சபதத்தை நிறைவேற்றமுடியாத அளவிற்கு நிபந்தனைகள் போடு.  நீ எதைக் கேட்டாலும் தருவார். 


சரண் கூறினார்: "அவர் பார்மரின் மகன், நான் அவரது தலையைக் கேட்டால், அவர் தலையையும் தியாகம் செய்வார்."


ஆட்சியாளர் கூறினார்: "பார்மர் நிலத்தின் மகனால் தர இயலாத  ஒன்றைக் கோருங்கள்."


சரண் மூலிக்கு வந்தான். திரளான சபையில் தேவி புத்திரரும் அக்னி புத்திரரும் தழுவிக் கொண்டனர். சாஞ்சோஜி கூறினார்: "கவி ராஜ், சரண் ஏதாவது கோருங்கள்."


"மன்னரே  அது உங்களால் முடியாது."


“ஏன் முடியாது? என் குலதெய்வம் மாண்டவராஜின் (சூரியனார்) கருணை என் மீது இருக்கிறது. இந்த அரச சிம்மாசனத்தின் மீது படபடக்கும் கொடி அவருடைய கொடியே தவிர எனது கொடியல்ல. இந்த அரச சிம்மாசனத்தை யாரும் வீணாகச் செய்ததில்லை; இந்த அரச சிம்மாசனத்தின் நற்பெயரைத் தக்கவைக்க மாண்டவ்ராஜ்  நிச்சயமாக அருள வருவார்.


“எனக்கு ஊட்டமளிப்பவரே, தங்களின் வளமான கருவூலத்தில் இருந்து ஒரு காசு கூட எனக்கு வேண்டாம், எனக்கு எந்த மரியாதையும் வெகுமதியும் வேண்டாம். தங்கள் தலைக்கு கூட எனக்கு விருப்பம் இல்லை”


"நீங்கள் என்ன வேண்டுமானாலும் கோரலாம்."


சரண் முழங்காலில் அமர்ந்து துஹா பாடினார்:


எஷ் அபே அதிபதி, தே கஜ் கே தாதார்

சவாஜ் தே மு சவ்பால் பார்க்கரா பார்மார்!


[சில மன்னர்கள் குதிரைகளைப் பரிசளிக்கிறார்கள், சில மன்னர்கள் யானைகளைக் கொடுக்கிறார்கள்; ஆனால் நீ வேறொரு ராஜாவை விட தாராள மனப்பான்மையுள்ளவன், அதனால் எனக்கு உயிருள்ள சிங்கத்தைத் தருகிறாய்.]


'வாழும் சிங்கம்...' கூட்டத்தில் அமர்ந்திருந்த அனைத்து உறுப்பினர்களும் கூச்சலிட்டனர் மற்றும் அவர்களின் குரல் சிலிர்த்தது.


"ஆமாம், ஆமாம், வாழும் சிங்கம்" ஒரு நீடித்த ராகத்தில் சவால்.


ஜாமி டான் கே டி ஜப்பார், லில்வாலு லிலர்

சவாஜ் தே மு சவ்பால், பர்கரா பர்மார்


[சில சக்தி வாய்ந்த மன்னர்கள் நிலங்களை தர்மம் செய்கிறார்கள், சில மன்னர்கள் தங்கள் தலையை தானே வெட்டிக்கொள்கிறார்கள், ஆனால் ஓ பர்மாரே, நான் உங்களிடம் சிங்கத்தை மட்டுமே கோருகிறேன்.]


சபை முழுதும் அச்ச உணர்வால் கர்ஜித்து, ‘கத்வா, இப்படிக் கோரிக்கை வைத்து, பர்மரின் புகழைக் குறைப்பதில் உனது பெருந்தன்மை கருதுகிறாயா?’ என்று உரக்கக் கண்டித்தது.


சரண் தனது புகழ்ச்சிப் பாடல்களைத் தொடர்ந்தார்:


க்ரோட்பாச தே காவ்யந்த், லக்பச லக்வர்

சவாஜ் தே மு சவ் பால், பார்காரா பர்மார்!


[நீங்கள் மற்ற கவிஞர்களுக்கு ஒரு கோடி நாணயங்களைக் கொடுக்கலாம், மற்ற கவிஞர்களுக்கு பணக்கார சொத்துக்களைக் கொடுக்கலாம் ஆனால் 'பரமார் போன்ற சிங்கத்திலிருந்து' நான் சிங்கத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கிறேன்]


"கொடூரமான காத்வோ", கூட்டத்தில் எழுப்பப்பட்ட கூட்டுக் குரல். காத்வி நான்காவது துஹாவைப் பாடினார்:


தோதா ரங் டியூன் டேவ், சோதா, புத்தி சார்

மோதே உஜ்லே தே மானே, பர்க்காரா பர்மார்!


[ஓ நல்லது, நியாயமான ஷோதா பர்மார், தயவுசெய்து எனக்கு சிரித்த முகத்துடன் ஒரு சிங்கத்தை பரிசளிக்கவும். எனவே உங்கள் எண்ணற்ற பாராட்டுக்களை கூறி மற்ற மன்னர்களின் அலுவலகங்களில் அபின் சாப்பிடுவேன்.]

சாஞ்சோஜியின் முகத்தில் பதற்றம் எதுவும் இல்லை. அவர் சிரித்த முகத்துடன் சொன்னார்:


"கவிஞரே நாளைக் காலையில் நாங்கள் உங்களுக்கு ஒரு சிங்கத்தைப் பரிசாகத் தருகிறோம்."


நள்ளிரவில் சாஞ்சோஜி மாண்டவ்ராஜ் கோவிலுக்குச் சென்று முறையிட்டார்:


“ஓ சூரிய கடவுளே, உயிருள்ள சிங்கத்தை நான் எப்படி பரிசளிப்பேன்? கடவுளே தயவு செய்து உனது புகழ் கொடியை குறை சொல்லாமல் இருக்க ஏதாவது செய்”


ஒரு கோவிலின் குவிமாடத்திலிருந்து, அசரீரி  ஒலி வந்தது: "ஓ, ராஜபுத்திரனே! அப்படியிருக்கையில் எதற்காக இங்கு வந்தீர்கள்? என் மலையில் சிங்கங்கள் கர்ஜிக்கின்றன, நீ ராஜவம்சம், ஒரு சிங்கத்தைப் பிடி.


இரண்டாம் நாள் அரச சபை உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, சாஞ்சோஜி; சோட்டிலா மலைக்குச் சென்றார். அவர் சரணிடம், "வா கவிஞரே, நான் உங்களுக்கு சிங்கத்தை தருகிறேன்" என்று கூறினார்.

சரண் பர்மாரின் புகழ்ச்சிப் பாடல்களைப் பாடத் தொடங்கினர்:


பாஞ்சாலி சிர் புரிய, விட்டல் தே வன்பர்,

ஷரம் ராகியா சச்சாதானி, ஜகதீஷன் கஜ்தார்!


விட்டல், பாஞ்சாலியின் கற்பைப் பாதுகாத்தாய்;

அதே போல சிங்கம் கொடுத்து சாச்சோஜியின் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.


சிறிது நேரத்தில் சிங்கம் ஒன்று உரத்த கர்ஜனையுடன் அருகில் வந்தது. சாஞ்சோஜி ஓடி வந்து அவன் காதுகளைப் பிடித்தார். சிங்கம் ஆடு போல் அடக்கமாக நின்றது. பர்மார் உரத்த குரலில், "ஓ கவிஞரே, நீங்கள் சிங்கத்தினை பரிசாக ஏற்கவும்" என்றார்.

சரண் பின்வாங்கி ஓட முயன்றார், அப்போது சாஞ்சோஜி அழைப்பு விடுத்தார்: “கத்வா, ஒன்பது லட்சம் இடங்களில் குற்றம் சாட்டப்படும்; யாரோ தூண்டிவிட்டு என்னை அவமதிக்க வந்தீர்கள், இப்போது ஏன் ஓடுகிறீர்கள்?"


சவாஜ் பாலி சம்ஹோ, பாதக்ய கேம்ஹி பாக்,

பந்து பச்சா பாக், பர்வா நாக் ஹேட் பத் ஜனே!


சிங்கத்தைக் கண்டு பயந்து ஏன் ஓடுகிறாய்? ஓ சரண், பின்வாங்குவது துணிச்சலான மனிதனுக்கு பொருந்தாது.]


பிச்சை கேட்கும் போது காத்வி பரிசை கொடுப்பதை விட அதைப் பெறுவது மிகவும் கடினம் என்ற உண்மையை மறந்துவிட்டார். பரிசு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படிச் செய்யவில்லை என்றால் அவருடைய வம்சமே கறைபடிந்துவிடும். இப்போது என்ன செய்ய?

தூரத்தில் இருந்து சரண் சாமர்த்தியமாக சொன்னான்:


சாஞ்சே சின் சமாபியோ, கேசர் ஜாலியோ கான்,

(உண்டு) ராம்தோ மெலியே ராணா, பொடியோ பர்மார்  தானி!


[ஓ, அரசே சாஞ்சா, நீங்கள் சிங்கத்தை காதில் பிடித்து என் காலடியில் அர்ப்பணித்தீர்கள். நான் பரிசை ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் தொண்டு என்னை அடைந்தது. இப்போது ராணா நீங்கள் சிங்கத்தை விடுவிக்கலாம்]


சிங்கத்தின் உடலைப் பார்த்து ராஜா சொன்னார்: “காட்டின் ராஜா, நீங்கள் இப்போது செல்லலாம். இன்றும் என் புகழைத் தக்க வைத்துக் கொண்டாய்” சிங்கம் போய்விட்டது. மக்களின் கூற்றுப்படி அந்த சிங்கம் அவரின் குல தெய்வமாகிய சூரியன் மாண்டவ்ராஜ் தான்.!

No comments: