Sunday, February 21, 2010

Vittingi - Rotating game of girls

விட்டிங்கி3


விட்டிங்கி3 - என்று சௌராஷ்டிர சிறுமிகள் முதல் பெண்கள் வரை விளையாடும் ஒரு நடனம் போன்ற விளையாட்டு உண்டு. இவ் விளையாட்டிற்கு விட்டிங்கி3 என்று சௌராஷ்டிர மொழியில் கூறுவர்.
 
எதிர் எதிரே நிற்கும் இருவர் தங்களின் கைகளை வலது கையை எதிரே நிற்பவரின் இடது கைக்கும், இடது கையை எதிரே நிற்பவரின் வலது கைக்குமாக கை குலுக்குவது போல் பிடித்துக் கொள்வர். பின் வேகமாக கையை ஒருவருக் கொருவர் எழுதபடி சுழலுவர். சுழலும் பொது அப்படியே பின் நோக்கி குனிவர். இந்த நடனம் போன்ற விளையாட்டின் பொது பல சௌராஷ்டிர பாடல்கள் பாடுவர்.



என் சிறு வயதில் பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. அப்போதே எந்த சௌராஷ்டிர பாடல்களும் முழுமையாக எவருக்கும் நினைவில் இல்லை. எனவே ' தி கோனே?, தி கோனே? ' என்று நினைவு படுத்தி சில வரிகள் நாணி கோணிக் கொண்டு பாடுவர். தற்போது எனக்கு அந்த பாடல்கள் எதுவும் நினைவு இல்லை. எனினும் அந்த விட்டிங்கி என்ற விளையாட்டு நம்மிடம் இருந்தது என்பதை நினைவு கூற எழுதுகிறேன்.




Vittingi is generally popular with the younger girls. They form pairs and then the two girls of each pair stand opposite each other holding each other's hands crosswise. Then they lift their heels and swing round and round on their toes. The movements gets faster and faster, the upper part of the body bends backward and the arms remain fully stretched. As the spinning gathers momentum, it creates an ecstasy and the girls go on and on till they reach the point of exhaustion. Even though they move very fast, they are very careful to maintain rhythm and keep singing various kinds of songs about the mother, the father, the brother, the mother-in-law and about various incidents connected with daily life.

Saturday, February 13, 2010

Sourashtra people's Social Reformer

சௌராஷ்டிர ஸமூஹ புனரமைப்பாளி K .R . கிருஷ்ணமூர்த்தி



இவர் ராஜுலையர் - பார்வதி தம்பதியர்க்கு 26 -4 -1912 ஆம் ஆண்டு பிறந்தார். தனது சௌராஷ்டிர ஸமூகத்திந் பரம்பரை தொழிலான நெசவு தொழிலை செய்து வந்த மக்கள் படிப்பறிவற்று பாமரர்களாக, வறுமையில், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதை கண்டு இளமை காலம் முதல் நெசவு தொழிலை துறந்து SSLC பயின்று ஆசிரியர் ஆனார். பின்னாளில் Elementary School Supervisor of Salem (தற்கால AEO ) என்று பதவி உயர்வு பெற்றார்.

அன்றைய காலத்தில் நம் மக்கள் இருந்த இருண்ட பின்தங்கிய தற்குறி நிலை போக்கி, அனைவரும் படிப்பறிவு பெற்று நன்னிலை அடைய வேண்டும் என்று இலவச கல்வி கற்ப்பிக்கத் துவங்கினார். ஆனாலும் நெசவு நெய்தால் தானே வயிற்றுக்கு வழி என்று பலரும் பள்ளிக்கு தமது பிள்ளைகளை அனுப்பவில்லை. வறுமை கொடிது அல்லவா? எனவே விடியற்காலை தனது நண்பர் ம:ளுவாது ஸ்ரீனிவாசன் அவர்களுடன் சேர்ந்து வீதி தோறும் மணி ஒலித்துக் கொண்டே செல்வார். மாணவர்கள் எழுந்து அவர் பின்னே சத்தார் பள்டம் எனப்படும் சேர்மன் சடகோபர் தெருவில் இருக்கும், அவரின் முயற்சியில் ஆரம்பித்த பள்ளிக்கு வருவர். பின்னர் பாடம் கற்று தருவார். தன்னிடம் பாடம் கற்றவர்கள் மேலும் வருமானமடைய ஆசிரியர் பயிற்சி கற்று தந்து பலரை ஆசிரியர்கள் ஆக்கினார். சலிக்காமல் கல்வி பணி செய்தது மட்டும் அல்லாமல், தன்னிடம் வரும் சௌராஷ்டிர ஸமூக மக்களில் படிப்பறிவற்றவர்களின் மனு எழுதுதல், பென்சன் வாங்கி தருதல் போன்ற சிறு, பெரிய உதவிகளை செய்து கொண்டே இருப்பார்.


இவர் சௌராஷ்டிரா கல்யாண மகாலின் செயலாளர் (பென்னாடம் வெங்கட்ராம் தெரு) ஆக இருந்த போது, இவரின் நிர்வாக திறமையை பார்த்து சௌராஷ்டிர விப்ரகுல நந்தவனம், வீராணம் ஆஞ்ஜநேயர் கோவில் ஆகிய நிர்வாகிகள் தாமே முன் வந்து இவர் நிர்வகித்த சௌ. கல்யாண மஹால் நிர்வாகம் வசம் தங்களது நிர்வாகத்தை ஒப்படைத்தனர்.

வீராணம் ஆஞ்ச நேயர் கோவிலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பன்னிரண்டு அடி உயர சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.




தனது வாழ் நாளில் இவர் செய்த சாதனைகள் பல.




1954 -55 ஆம் வருடம் தமிழ் நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடியது. அப்போது பல நெசவாளிகள் குறைந்த பட்ச கூலி பெற முடியாமல் பட்டினியால் தங்களது குடும்பம் சிறிது சிறிதாக இறப்பது கண்டு, கூலி நெசவாளர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாம்பே செல்லத் துவங்கினர். இதனை தடுக்கவும் முதலாளிகளின் மனப்பான்மையை மாற்றவும் சேலம் டவுன் கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் என்ற ஸ்தாபனத்தை, அன்றைய தமிழக நிதிஅமைச்சராக இருந்த C .சுப்ரமணியம் அவர்களை அழைத்து, ஸ்தாபனம் ஆரம்பித்து பாம்பே செல்வதை தடுத்தார். இதன் பின் கூலி நெசவாளர்கள் வாழ்வில் சிறிது சிறிதாக பிச்சை எடுக்கும் நிலையில் இருந்து முன்னேற ஆரம்பித்தனர்.
 
பின் இச் சங்கம் பல காரணங்களால் செயல் படவில்லை.




எனவே கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில் வெவ்வேறு கால கட்டங்களில் ஆரம்பித்தார். இச் சங்கங்கள் இன்றும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு உள்ளன. நெசவளார்கள் வாழ்வில் வறுமை நிலையை போக்கிய இச் சங்கங்கள் இவரது மிகப் பெரும் சாதனை. ஏன் எனில் பலரும் யோசித்து கூட பார்க்காட்ட சமயத்தில் பிரச்சனைகளை யோசித்து அதன் தீர்வையும் கண்டவர்.
 
1956 ஆம் ஆம் ஆண்டு சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்தார்.


1974 ஆம் ஆண்டு சேலம் ராஜகணபதி பட்டு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்தார்.

1976 ஆம் ஆண்டு சூப்பர் பட்டு சொசைட்டி ஆரம்பித்தார்.

இவைகள் நெசவாளர்கள் வாழ்வில், கூலி உயர்வு பெற காரணமாக இருந்தது.
 
பின்


ஆசிரியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் அமைத்து பலரும் சொந்த வீடு வாங்க வழி வகை செய்தார்.

நெசவாளர்கள் வீடு கட்டும் சங்கம் 1979 -1980 இல் உருவாக்கி அசோக் நகர் என்ற நெசவாளர் குடிஇருப்பை குறித்த செலவில் பலரும் வீடு பெற வகை செய்தார்.

ஹிந்து சமய மன்ற செயலாளராக இருந்து சௌ.கல்யாண மகாலில் வாரியார், கீரன் போன்ற சிறந்த ஆன்மீக பேச்சாளர்களை கொண்டு மார்கழி உபன்யாசம் செய்வித்தார்.



அவர் வட இந்தியாவில் புயல் வந்த போது நிவாரண பணி மேற்கொண்ட போது நடந்த ஒரு சுவையான சம்பவத்தை அவரது மகன் திரு கே.கே. நரசிம்மன், M .Sc , M .A , LLB , DLLAL நினைவு கூர்ந்தார்.




" நிவாரண பொருட்கள் சேகரிக்கும் தினம் அன்று சூரிய கிரகணம். அப்போது பட்டபகலில் இருட்டிவிட்டது. அந்த சமயத்தில் வீதியில் பலரும் ஒரு தாம்பாள தட்டில் மூன்று முதல் நான்கு இன்ச் உயர தண்ணீர் ஊற்றி அதில் ஒரு உலக்கையை நிற்கவிட்டு இருந்தனர். அது எந்த பிடிமானம் இல்லாமல் நீராக இருந்தது. பின் கிரகணம் முடிந்ததும் உலக்கை சாய்ந்து விட்டது. இதன் விஞ்ஞான ரீதியான விளக்கம் தெரியவில்லை " என்றார்.



இத்தனை சேவைகள் செய்திருந்தாலும் சிறிதும் கர்வமின்றி வாழ்ந்தவர் . "நான் செய்தேன்" என்று கூட பெருமையாக எடையும் சொல்லிக் கொள்ள மாட்டார். அடக்கமே உருவாக வாழ்ந்தவர். அவரது வழியில் அவரது மகனும் ஸமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் சோமநாதபுர பாணியில் , சேலம் நாமமலையில் சோமநாதேஸ்வரர் கோவிலை உருவாக்குவதில் பெரிய பங்கு வகித்து உள்ளார்.
 
குச்சீன்-அய்ய என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் 26 -4 -1997 ஆண்டு வைகுண்ட ப்ராப்தி அடைந்தார்.
 
தெ3ஸ்வான் என்ற வீட்டுப் பெயர் உடைய இவர்கள், தங்களது முன்னோர்களில் ஒருவர் 'குறிச்சி' என்ற ஊரில் சில காலம் வாழ்ந்து பின் சேலம் திரும்பியதால் குறிச்சி என்ற வீட்டுப் பெயர் (surname ) உடையவர்களாக அழைக்கப்படுகின்றனர்.