Saturday, February 13, 2010

Sourashtra people's Social Reformer

சௌராஷ்டிர ஸமூஹ புனரமைப்பாளி K .R . கிருஷ்ணமூர்த்தி



இவர் ராஜுலையர் - பார்வதி தம்பதியர்க்கு 26 -4 -1912 ஆம் ஆண்டு பிறந்தார். தனது சௌராஷ்டிர ஸமூகத்திந் பரம்பரை தொழிலான நெசவு தொழிலை செய்து வந்த மக்கள் படிப்பறிவற்று பாமரர்களாக, வறுமையில், தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பதை கண்டு இளமை காலம் முதல் நெசவு தொழிலை துறந்து SSLC பயின்று ஆசிரியர் ஆனார். பின்னாளில் Elementary School Supervisor of Salem (தற்கால AEO ) என்று பதவி உயர்வு பெற்றார்.

அன்றைய காலத்தில் நம் மக்கள் இருந்த இருண்ட பின்தங்கிய தற்குறி நிலை போக்கி, அனைவரும் படிப்பறிவு பெற்று நன்னிலை அடைய வேண்டும் என்று இலவச கல்வி கற்ப்பிக்கத் துவங்கினார். ஆனாலும் நெசவு நெய்தால் தானே வயிற்றுக்கு வழி என்று பலரும் பள்ளிக்கு தமது பிள்ளைகளை அனுப்பவில்லை. வறுமை கொடிது அல்லவா? எனவே விடியற்காலை தனது நண்பர் ம:ளுவாது ஸ்ரீனிவாசன் அவர்களுடன் சேர்ந்து வீதி தோறும் மணி ஒலித்துக் கொண்டே செல்வார். மாணவர்கள் எழுந்து அவர் பின்னே சத்தார் பள்டம் எனப்படும் சேர்மன் சடகோபர் தெருவில் இருக்கும், அவரின் முயற்சியில் ஆரம்பித்த பள்ளிக்கு வருவர். பின்னர் பாடம் கற்று தருவார். தன்னிடம் பாடம் கற்றவர்கள் மேலும் வருமானமடைய ஆசிரியர் பயிற்சி கற்று தந்து பலரை ஆசிரியர்கள் ஆக்கினார். சலிக்காமல் கல்வி பணி செய்தது மட்டும் அல்லாமல், தன்னிடம் வரும் சௌராஷ்டிர ஸமூக மக்களில் படிப்பறிவற்றவர்களின் மனு எழுதுதல், பென்சன் வாங்கி தருதல் போன்ற சிறு, பெரிய உதவிகளை செய்து கொண்டே இருப்பார்.


இவர் சௌராஷ்டிரா கல்யாண மகாலின் செயலாளர் (பென்னாடம் வெங்கட்ராம் தெரு) ஆக இருந்த போது, இவரின் நிர்வாக திறமையை பார்த்து சௌராஷ்டிர விப்ரகுல நந்தவனம், வீராணம் ஆஞ்ஜநேயர் கோவில் ஆகிய நிர்வாகிகள் தாமே முன் வந்து இவர் நிர்வகித்த சௌ. கல்யாண மஹால் நிர்வாகம் வசம் தங்களது நிர்வாகத்தை ஒப்படைத்தனர்.

வீராணம் ஆஞ்ச நேயர் கோவிலின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பன்னிரண்டு அடி உயர சிலை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.




தனது வாழ் நாளில் இவர் செய்த சாதனைகள் பல.




1954 -55 ஆம் வருடம் தமிழ் நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடியது. அப்போது பல நெசவாளிகள் குறைந்த பட்ச கூலி பெற முடியாமல் பட்டினியால் தங்களது குடும்பம் சிறிது சிறிதாக இறப்பது கண்டு, கூலி நெசவாளர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பாம்பே செல்லத் துவங்கினர். இதனை தடுக்கவும் முதலாளிகளின் மனப்பான்மையை மாற்றவும் சேலம் டவுன் கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் என்ற ஸ்தாபனத்தை, அன்றைய தமிழக நிதிஅமைச்சராக இருந்த C .சுப்ரமணியம் அவர்களை அழைத்து, ஸ்தாபனம் ஆரம்பித்து பாம்பே செல்வதை தடுத்தார். இதன் பின் கூலி நெசவாளர்கள் வாழ்வில் சிறிது சிறிதாக பிச்சை எடுக்கும் நிலையில் இருந்து முன்னேற ஆரம்பித்தனர்.
 
பின் இச் சங்கம் பல காரணங்களால் செயல் படவில்லை.




எனவே கூட்டுறவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில் வெவ்வேறு கால கட்டங்களில் ஆரம்பித்தார். இச் சங்கங்கள் இன்றும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு உள்ளன. நெசவளார்கள் வாழ்வில் வறுமை நிலையை போக்கிய இச் சங்கங்கள் இவரது மிகப் பெரும் சாதனை. ஏன் எனில் பலரும் யோசித்து கூட பார்க்காட்ட சமயத்தில் பிரச்சனைகளை யோசித்து அதன் தீர்வையும் கண்டவர்.
 
1956 ஆம் ஆம் ஆண்டு சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்தார்.


1974 ஆம் ஆண்டு சேலம் ராஜகணபதி பட்டு கூட்டுறவு சங்கத்தை ஆரம்பித்தார்.

1976 ஆம் ஆண்டு சூப்பர் பட்டு சொசைட்டி ஆரம்பித்தார்.

இவைகள் நெசவாளர்கள் வாழ்வில், கூலி உயர்வு பெற காரணமாக இருந்தது.
 
பின்


ஆசிரியர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் அமைத்து பலரும் சொந்த வீடு வாங்க வழி வகை செய்தார்.

நெசவாளர்கள் வீடு கட்டும் சங்கம் 1979 -1980 இல் உருவாக்கி அசோக் நகர் என்ற நெசவாளர் குடிஇருப்பை குறித்த செலவில் பலரும் வீடு பெற வகை செய்தார்.

ஹிந்து சமய மன்ற செயலாளராக இருந்து சௌ.கல்யாண மகாலில் வாரியார், கீரன் போன்ற சிறந்த ஆன்மீக பேச்சாளர்களை கொண்டு மார்கழி உபன்யாசம் செய்வித்தார்.



அவர் வட இந்தியாவில் புயல் வந்த போது நிவாரண பணி மேற்கொண்ட போது நடந்த ஒரு சுவையான சம்பவத்தை அவரது மகன் திரு கே.கே. நரசிம்மன், M .Sc , M .A , LLB , DLLAL நினைவு கூர்ந்தார்.




" நிவாரண பொருட்கள் சேகரிக்கும் தினம் அன்று சூரிய கிரகணம். அப்போது பட்டபகலில் இருட்டிவிட்டது. அந்த சமயத்தில் வீதியில் பலரும் ஒரு தாம்பாள தட்டில் மூன்று முதல் நான்கு இன்ச் உயர தண்ணீர் ஊற்றி அதில் ஒரு உலக்கையை நிற்கவிட்டு இருந்தனர். அது எந்த பிடிமானம் இல்லாமல் நீராக இருந்தது. பின் கிரகணம் முடிந்ததும் உலக்கை சாய்ந்து விட்டது. இதன் விஞ்ஞான ரீதியான விளக்கம் தெரியவில்லை " என்றார்.



இத்தனை சேவைகள் செய்திருந்தாலும் சிறிதும் கர்வமின்றி வாழ்ந்தவர் . "நான் செய்தேன்" என்று கூட பெருமையாக எடையும் சொல்லிக் கொள்ள மாட்டார். அடக்கமே உருவாக வாழ்ந்தவர். அவரது வழியில் அவரது மகனும் ஸமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது மகன் சோமநாதபுர பாணியில் , சேலம் நாமமலையில் சோமநாதேஸ்வரர் கோவிலை உருவாக்குவதில் பெரிய பங்கு வகித்து உள்ளார்.
 
குச்சீன்-அய்ய என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் 26 -4 -1997 ஆண்டு வைகுண்ட ப்ராப்தி அடைந்தார்.
 
தெ3ஸ்வான் என்ற வீட்டுப் பெயர் உடைய இவர்கள், தங்களது முன்னோர்களில் ஒருவர் 'குறிச்சி' என்ற ஊரில் சில காலம் வாழ்ந்து பின் சேலம் திரும்பியதால் குறிச்சி என்ற வீட்டுப் பெயர் (surname ) உடையவர்களாக அழைக்கப்படுகின்றனர்.
 

Wednesday, January 6, 2010

Devanagari Unicode having facility to type Sourashtra language

The unicode fonts are capable to type Sourashtra language.   The hrasva sound (Kuril ) ye & o is required to previous fonts.  It had done on unicode fonts.



Now we can enjoy the sourashtra typing with accuracy.  Google having facility of translitration roman alphabets to devanagari alphabets.  Here also we enjoy sourashtra mail composing without 2 hrasva sound.

Devanagari Script Recognition

Devanagari Script Recognition


More than 300 million people around the world use Devanagari script. It is the base script of many languages in India, such as Hindi and Sanskrit, Marati, Sourashtra, Konkani, and Mythili. And there are other languages that use variants of this script. Its basic set of symbols consists of 34 consonants and 18 vowels, and though Devanagari has a native set of symbols for numerals, Arabic numbers are now commonly used. Optical Character Recognition for Devanagari is highly complex do to its rich set of conjuncts.


Devanagari is written from left to right along a horizontal line. Its basic set of symbols consists of 34 consonants or ('vyanjan') and 18 vowels ('svar'). Characters are joined by a horizontal bar that creates an imaginary line by which Devanagari text is suspended, and no spaces are used between words. A single or double vertical line called a Danda was traditionally used to indicate the end of phrase or sentence. Devanagari also has a native set of symbols for numerals, though Arabic numbers are typically used.


In part, Devanagari owes its complexity to its rich set of conjuncts. The language is partly phonetic in that a word written in Devanagari can only be pronounced in one way, but not all possible pronunciations can be written perfectly. A syllable ("akshar") is formed by a vowel alone or any combination of consonants with a vowel.

Here is a sample set of non-compound devanagari characters.





You can clearly see that some characters have upper and lower modifiers. Here is a sample of Devanagari modifiers.





Obviously, these modifiers make Optical Character Recognition (OCR) with Devanagari script very challenging. OCR is further complicated by compound characters that make character seperation and identification very difficult.



Examples of some compound charaters are illustrated below.



OCR for Devanagari script becomes even more difficult when compound character and modifier characteristics are combined in 'noisy' situations. The image below illustrates a Devanagari document with background noise. You can clearly see that compound characters and modifiers are difficult to detect in this image because the image background is not uniform in color, and marks are present that must be distinguished from characters.








Devanagari text can be represented in 2 ways - Transliteration and Unicode formats. Both formats are widely used, though each makes its own claim for having covered the entire devanagari character set. A transliteration map is shown below. Transliteration is used to convert english alphabets into devanagari characters, based upon phonetic translation.





Free software is available that can convert english into Devanagari based upon the transliteration format

Learn from Tamilians

சமீபத்தில் லேனா தமிழ்வாணன் எழுதிய ஒரு கட்டுரை கிடைத்தது.  அதனை படித்து பாருங்கள்.  நமக்கும் சௌராஷ்ட்ர மொழி பற்றி ஒரு உற்சாகம் கிடைக்கும்.  நமது மொழிக்கு இப்படி ஒரு பெருமை உள்ளது நமக்கே தெரிய வரும்.

Reasons of Sourashtra Alphabets Declaration

     சமீபத்தில் சௌராஷ்ட்ர மொழியை எழுதுவதற்கு பாளையங்கோட்டையில் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள், மத்திய அரசு அதிகாரிகள் சௌராஷ்ட்ர சமூக பிரமுகர்கள் முன்னிலயில் வெளியிடப்பட்டது.  சௌராஷ்ட்ர மத்திய சபையின் மொழி அறிஞர் குழு கமிட்டி சார்பில் மைசூர் CIIL  அலுவலகத்தில் இறுதி வடிவம் செய்யப்பட்ட எழுத்துருக்கள் வெளியிடப்பட்டது. 

     இதனை ஒட்டி சில கேள்விகள் எழுந்து உள்ளது.  சிலர் ராமாராய் எழுத்துரு சௌராஷ்ட்ர மொழியை எழுவதற்கு பிரச்சாரம் செய்து வந்த  நிலையில், ஏன் ஹிந்தி எழுத்தை சௌராஷ்ட்ர மொழி எழுத பயன்படுத்த   வேண்டும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.   இதனை ஒட்டி சில விளக்கங்கள் தருகிரேன்.

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்னரே சௌராஷ்ட்ர மடிய சபையில் விவாதங்கள் நடை பெற்று நமது சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்துருவாக தேவநகரி எழுத்தே உரியது.  நமது பாரம்பரியத்திற்கு உகந்ததும் நமது சௌராஷ்ட்ர மொழி உச்சரிப்பிற்கு உள்ள அனைத்து ஒலிகளும் தேவநகரி எழுத்தில் பிரதிபலிக்கப்படுவதால் அதனையே (அதாவது ஹிந்தி எழுத்தையே ) நாமும் உபயோகபடுத்தலாம்  என தீர்மானம் இயற்றினர்.  ஆனால் தமிழ் நாட்டில் அன்று இருந்த ஹிந்தி எதிர்ப்பு நிலை காரமணாக அதனை செயல் படுத்துவதில் சிரமம் இருந்தது.  இந்த   இடைப்பட்ட காலத்தில் ராமராய் எழுத்தை சிலர் பிரசாரம்     செய்வதில் வெற்றி கண்டனர் சிலர். 

அவர்களுக்கு ஒரு கேள்வி.  ஒரு பேச்சுக்காக இன்னும் இருநூறு ஆண்டு கழித்து ராம ராய் தெலுங்கு எழுத்தினை சீரமைத்து உருவாக்கிய எழுத்தினை விட்டு ஒருவர் ஆராய்ச்சி செய்தால், நம்மை அவர் " இவர்கள் விஜயநகர் பேரரசு வந்து பின் தமிழகம் வந்தவர்கள், இவர்களது எழுத்து தெலுங்கு எழுத்து போல வுள்ளது, இவர்கள் தெலுங்கு மற்றும் சொசுராஷ்டிரா மக்களின் கலப்பினமாவார்கள்" என்று முடிவு செய்தால் அதனை எப்படி மறுக்க முடியும்?   அவர்களுக்கு ஒரு தகவல் கீழே வுள்ள படத்தில் உள்ளது.   எப்படி தேவநகரி எழுத்து சௌராஷ்ட்ர மொழிக்கு இயல்பாகவே பொருந்தும் என்பதை புரிந்து கொள்ளலாம்.


இந்திய  மொழிகளின் எழுத்துருக்கள் வம்சாவளி படம்.   பிரம்மி எழுத்தில் இருந்து நகரி எழுத்து வரை வாருங்கள்.  அங்கு நமது சௌராஷ்ட்ர பகுதி இருக்கும் இடத்தில் என்ன எழுத்து இருக்கிறது என்று பாருங்கள்.  இன்று குஜராத்திலும், மகாராஷ்ட்ரவிலும் தேவநகரி எழுத்து தானே உபயோகப் படுத்தப்படுகிறது?  நமது தாய் நிலமான சௌராஷ்ட்ர வில் தேவநகரி எழுத்து உபயோகத்தில் இருக்க நாம் இங்கு வேறு எழுத்தி ஏன் உபயோகப்படுத்த  வேண்டும்?    தெலுங்கு எழுத்தை சீரமைத்து எழுதுவது சௌராஷ்ட்ர மொழியின் நீண்ட பாரம்பரியத்திற்கு அது பொருந்துமா? நமது பழமையை அது வேர் அறுத்து விடாதா?

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது சௌராஷ்ட்ர சமஸ்தான மன்னர்கள் உபயோகப்படுத்திய தபால் கார்டினை பாருங்கள் .  அதில் தேவநகரி எழுத்து தானே உபயோகித்து உள்ளனர்?

மேல் கோடு இடப்படாமல் இருக்கும் தேவநகரி எழுத்து அச்சில் உள்ளது.   இந்த பாரம்பரியத்தை ஏன் நம்மில் சிலர் அறுக்க விரும்புகிறார்கள்?

Monday, January 4, 2010

Sourashtra Script (Alphabets) Declaration function

சமீபத்தில் சௌராஷ்ட்ர மொழிக்கு தேவநகரி எழுத்து அடிப்படியிலான எழுத்து மத்திய அரசு மொழி நிறுவனமான சென்ட்ரல் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியன் லாங்வேஜ், மைசூர் மூலமாக வெளியீடு நடைபெற்றது. 

தேவநகரி எழுத்து  என்றால் ஹிந்தி, சமஸ்க்ருதம் (हिंदी संस्कृत ) எழுத பயன்படும் எழுத்து தான்.  ஆனால் சௌராஷ்ட்ர மொழிக்கு என உள்ள சிறப்பு உச்சரிப்புகளுக்கென ஆறு எழுத்துக்கள் ஹிந்தி எழுத்துடன் சேர்க்கப்பட்டு உள்ளது.  கீழ் உள்ள  படம் பார்க்க.   இவைகள்  தான் சௌராஷ்ட்ர மொழி எழுத்துக்கள்.

   

இது போன்று சௌராஷ்ட்ர மொழியினை எழுத வேண்டும் என மாடல் காண்பிக்கப் பட்டு உள்ளது.   இதில் உயிர் எழுத்தில் எ, என்ற எழுத்து ஹிந்தி மொழியில் இல்லை.   அது சௌராஷ்டிர மொழியில் சேர்க்கப் பட்டு உள்ளது.   மற்றும் ல: ம: ந: ர: என்ற சிறப்பு சௌராஷ்ட்ர உச்சரிப்புகளுக்கு சிறப்பு எழுத்துகள் சேர்க்கப் பட்டு    உள்ளது.  இந்த லிபி பிரகடன விழாவில் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள்,  மத்திய அரசு அதிகாரிகள், சௌராஷ்ட்ர சமுக முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விழாவின் அழைப்பு மடலை கீழே காணலாம்.




இவ்வாறு சீரும் சிறப்புமாக சௌராஷ்ட்ர மக்களின் பிரதிநிதி ஆகிய சௌராஷ்ட்ர மத்ய சபை பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான சௌராஷ்ட்ர பொது மக்கள் முன்னிலயில் பாளையங்கோட்டை ஐ ஐ பி எம் உயர் நிலை பள்ளியில் நடை பெற்ற விழாவில்  தேவநகரி எழுத்து ஏற்று கொள்ளப்பட்டது.   தமிழக பள்ளிகளில் மொழிவாரி சிறுபான்மை நல துறை மூலமாக சௌராஷ்ட்ர மொழி கற்பிக்க வேண்டி பலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.   மத்திய அரசில் சிறுபான்மை மொழி பட்டியலில் நமது சௌராஷ்ட்ர மொழி இல்லை.  இந்த எழுத்து பிரகடந விழாவில் மத்திய அரசு பட்டியலில் நமது சௌராஷ்ட்ர மொழி சேர்க்கப் படும் என தெரிவிக்கப் பட்டது.   அப்படி சேர்க்கப் பட்டால் சௌராஷ்ட்ர மொழிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

Monday, May 11, 2009

SAURASHTRA CULTURE SURVIVING TEAM


For the past few hundreds of year from migration (1400 years before) from Saurashtra, we celebrate Rama-navami and Krishna Jayanthi (Janmashtami) traditionally without gap. Usually Rama navami celebrated ten days and Krishna jayanthi takes one day. The folk-dance in humor form has performed entire Ramayana on the ten-day celebration. Now a days particularly for the past 30 years the celebration comes nearly an end in Tamil Nadu sourashtrians. No folk singers remaining. Now in Salem only one folk-singer is remaining. No folk dancers! To preserve and save the tradition, an organisation and folk group created by G.R. Paneer selvam. The organisation called SALEM SAURASHTRA SRI KRISHNA BRINDAVANA KOLATTA KALAI KUZU. Stated at 1989.

The folk group now in Male and female group as its part.

The male group performed many programmes in many occasions at Tirupati Devastanam, Taramangalam Temple, Chinna tirupati Temple, Sri Rangam Temple, Prahadeeswara temple's Kumbabishekam, Tanjore and as usually yearly Rama navami and Krishna jayanthi in Salem.

They also conducted one Sourashtra language play and patti manram.

The contacting persons are G.R. Tulasiram & G.R. Paneer selvam, Cell PHone : 9790619522.